புனிதபால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை

புனித பால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்பது மயிலாடுதுறை நகராட்சி, நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளி ஆகும்.[1]

அமைவிடம் தொகு

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 500மீ தொலைவில் உள்ளது.

வரலாறு தொகு

இந்த பள்ளியானது 1930ஆம் ஆண்டு மரியன்னையின் தூய இதய கன்னியர் சபையின் அருட்சகோதரர்களால் பெண்களின் வாழ்வியல் சாதனம் கல்வி தான் என்ற குறிக்கோளோடு ஆரம்பிக்கப்பட்டது. 1956ல் உயர்நிலைப்பள்ளியாகவும் 1978ல் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

இயக்கங்களும், சங்கங்களும் தொகு

  • நாட்டுநலப்பணித்திட்டம்
  • சாரணியர் இயக்கம்
  • கண்மணி இயக்கம்
  • தேசிய பசுமைப்படை
  • இளம் மாணவியர் இயக்கம்
  • செஞ்சிலுவை இயக்கம்

மன்றங்கள் தொகு

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மன்றங்கள் மற்றும் நுகர்வோர் மன்றம், ஆய்வு வாழ்க்கைத் திறன் கல்வி ஆகிய மன்றங்கள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு