புரெயில் கோட்டை

புரெயில் கோட்டை (Burail Fort) என்பது இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரமான சண்டிகர் நகரின் தற்போதைய 45 ஆவது பிரிவில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். முகலாயர் காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது[1]. கி.பி 1712 ஆம் ஆண்டுவரையில் இக்கோட்டை ஃபாச்தார் எனப்படும் முகலாயக் காவல் அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இக்காவல் அதிகாரி பொதுமக்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். புதியதாக திருமணம் செய்து கொண்ட மணப்பெண் ஒவ்வொருவரும் அவர்களுடைய கணவன்மார்களுடன் செல்வதற்கு முன் சிலநாட்கள் இவருடன் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். பொதுமக்கள் இவருக்கு எதிராக பண்டா பகதூர் எனப்படும் சீக்கிய படைத்தலைவரிடம் முறையிட்டனர். கல்சா இராணுவத்தை அனுப்பிய இவர் காவல் அதிகாரியையும் கொன்று கோட்டையையும் கைப்பற்றினார்.

புரெயில் கோட்டை
Burail Fort
பகுதி: சண்டிகர்
சண்டிகர், பிரிவு 45, ஒன்றியப் பகுதி, இந்தியா
புரெயில் கோட்டையின் தென்கிழக்கு திசை தூண்
புரெயில் கோட்டை Burail Fort is located in பஞ்சாப்
புரெயில் கோட்டை Burail Fort
புரெயில் கோட்டை
Burail Fort
ஆள்கூறுகள் 30°25′21″N 76°27′14″E / 30.4226°N 76.4539°E / 30.4226; 76.4539
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது தனியார்
மக்கள்
அனுமதி
உண்டு
நிலைமை நன்றாக இல்லை, பெரும்பாலான பகுதிகள் வசிப்பிடங்களாக விற்கப்பட்டன.
இட வரலாறு
கட்டியவர் முகலாயர் (ஆனால் பண்டா பகதூரால் பின்னாளில் கைப்பற்றப்பட்டது)
கட்டிடப்
பொருள்
சிறியவகை செங்கற்கள்]]
சண்டைகள்/போர்கள் பண்டா பகதுரின் பஞ்சாப் படை முகலாயரின் ஃபாச்தார் படையுடன் போர்
நிகழ்வுகள் 1712

படக்காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரெயில்_கோட்டை&oldid=2782521" இலிருந்து மீள்விக்கப்பட்டது