புலப்பாட்டு முரண்பாடு

உளவியலில் புலப்பாட்டு முரண்பாடு (cognitive dissonace) அல்லது அறிதிற முரண்டாடு என்பது, முரண்பட்ட கருத்தாக்கம், மதிப்பீடுகளை கொண்டுள்ளதாலோ, அல்லது தன் மதிப்பீடுகள் அல்லது தற்சமய நம்பிக்கைகளுக்கு, முரண்பட்ட புதிய கருத்தாகக்கங்களை உள்வாங்கும் போது, ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தம் ஆகும்.[1][2]

லியான் பெஸ்டிஞ்சரின் புலப்பாட்டு முரண்பாடு கோட்பாடு எவ்வாறு மனிதர்கள் தங்கள் உட் சமநிலையை தக்கவைக்க போராடுகிறார்கள் என்பதை குறித்தது. முரண்களை சந்திக்கும் போது ஆட்கள் மனதளவில் மிக சங்கடமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பின்பு இது போன்ற முரண்பாடுகளை குறைப்பதற்காக ஊக்கம் அடைகிறார்கள், முடிந்தால் இம்முரண்பாடுகளை அதிகரிக்கும் சூழல்களையோ, தகவல்களையோ அறவே தவிர்க்க முற்படுகிறார்கள்.

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. Festinger, L. (1957). A Theory of Cognitive Dissonance. California: Stanford University Press.
  2. Festinger, L. (1962). "Cognitive dissonance". Scientific American 207 (4): 93–107. doi:10.1038/scientificamerican1062-93. https://archive.org/details/sim_scientific-american_1962-10_207_4/page/93. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலப்பாட்டு_முரண்பாடு&oldid=3521138" இலிருந்து மீள்விக்கப்பட்டது