பூங்காவனம் (இதழ்)

பூங்காவனம் இலங்கை, கொழும்பிலிருந்து வெளிவரும் கலை இலக்கிய சமூக மாதாந்த இதழாகும். இதன் முதல் இதழ் மே 2010 இல் வெளிவந்தது. இதன் பதிவிலக்கம் ISSN 2012-6700 ஆகும்.

காலாண்டு சஞ்சிகையாக 2010 ஆய் ஆண்டிலிருந்து பூங்காவனம் சஞ்சிகை வெளிவருகிறது. இதன் முதலாவது இதழ் திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களது புகைப்படத்தை அட்டைப் படமாகத் தாங்கியதாக வெளிவந்தது.

உள்ளடக்கம் தொகு

ஒரு கலை இலக்கிய இதழ் என்றடிப்படையில் சிறுகதைகள், கவிதைகள், மகளிர் தொடர்பான ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. பூங்காவனம் இதழின் முகப்பட்டையில் இலங்கையில் பிரபல்யம் பெற்றிருந்த பெண்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருந்தன. பெண்கள் தொடர்பான பல்வேறுபட்ட ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தமையும் இவ்வதழில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்காவனம்_(இதழ்)&oldid=3594242" இலிருந்து மீள்விக்கப்பட்டது