பேச்சு:காந்தப்பாயம்

இது காந்தப்பாய்வு என்று இருப்பது நன்றாக இருக்கும். பாயம் என்ற சொல் சரியான பொருள் தரும் சொல்லாக இருப்பதாகத் தோன்றவில்லை. பாய் என்னும் வினைச் சொல்லிலிருந்து பாய்வு, பாய்தல் (பாய்தல் > பாய்ச்சல் > பாசனம்), பாய்கை முதலிய சொற்களைப் பெறலாம். இதே போல தேய், தேய்வு, தேய்தல். பாயம் என்று ஒரு சொல் ஆக்கலாம், ஆயின் அது பாய்வு என்னும் பொருள் தருமா என நினைக்க வேண்டும். ஆய்>ஆய்வு, தோய் >தோய்வு, சாய்>சாய்வு என்று. ஆயம், சாயம், தோயம் ஆகிய சொற்கள் உள்ளன ஆனால் பொருள் கிளைப்பது வேறாக உள்ளது. எனவே பாய்வதைக் குறிக்கவேண்டுமெனில் பாய்வு என்று குறிப்பது நலம்.--C.R.Selvakumar 23:25, 17 ஜூலை 2006 (UTC)செல்வா

இலங்கைப் பாடநூல்களில் நீண்டகாலமாக காந்தப்பாயம் என்ற சொல்லே பயன்பட்டபோதிலும் செல்வாவின் கருத்தே சரி எனப்படுகின்றது. காந்தப்பாய்வு என மாற்றுவதே சரி. கருத்துக் கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:59, 25 ஏப்ரல் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காந்தப்பாயம்&oldid=1650766" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காந்தப்பாயம்" page.