பேச்சு:கே. எம். ஆதிமூலம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
அருமையான கட்டுரை சிறீதரன் கனகு! இவரைப் பற்றி இன்று பட்டுநாகர் விருது வென்ற முனைவர் பாசுக்கரன் அவர்கள் கூறக்கேட்டேன். நோபல் பரிசாளர் ச. வெ. இராமன் அவர்களின் மகன் முனைவர் இராதாகிருட்டிணன் அவர்கள் பெங்களூரில் ஒருமுறை திரு பாசுக்கரனைப்பார்த்து, "நீ தமிழன் என்கிறாயே, ஆதிமூலத்தைத் தெரியுமா?" என்று கேட்டாராம். பிரான்சியர்களினிடையே புகழ்பெற்ற ஓவியர் என்றும் கூறக்கேட்டாராம். இவரைப்பற்றி ஒரு குறுங்கட்டுரையாவது எழுதுவோம் என்றே வந்தேன். இப்படி அழகான ஒரு கட்டுரை ஏற்கனவேயிருப்பது கண்டு மகிழ்ந்தேன். நன்றி சிறீதரன்! --செல்வா (பேச்சு) 16:36, 22 மே 2014 (UTC)