மகாமகம் சிறப்பு மலர் 2004 (நூல்)

நூல்

மகாமகம் சிறப்பு மலர் 2004, 2004 மகாமகத்தின்போது தமிழக அரசு வெளியிட்ட நூலாகும்.

மகாமகம் சிறப்பு மலர் 2004
நூல் பெயர்:மகாமகம் சிறப்பு மலர் 2004
ஆசிரியர்(கள்):ஆசிரியர் குழு
வகை:சமயம்
துறை:சமயம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:280
பதிப்பகர்:தமிழ்நாடு அரசு
பதிப்பு:2004

அமைப்பு தொகு

இந்நூல் அருளாளர்களின் ஆசியுரைகளுடனும், 40க்கும் மேற்பட்ட சிற்பம், ஓவியம், கட்டடம், இசை, இலக்கியம், கல்வெட்டு, புராணம் என்ற பல கூறுகளில் அமைந்த கட்டுரைகளைக் கொண்டுள்ளது. மகாமகம், குடந்தையில் சூரியன் வழிபாடு, பழையாறைத் திருக்கோயில்கள், குடந்தைக் கீழ்க்கோட்டம், ஏட்டுச்சுவடிகளில் குடந்தைப்புராணம், கலம்காரி ஓவியங்கள், கும்பேசர் குறவஞ்சி உள்ளிட்ட பல தலைப்புகளில் கட்டுரைகள் காணப்படுகின்றன.

உசாத்துணை தொகு

'மகாமகம் சிறப்பு மலர் 2004', நூல், (2004; தமிழ்நாடு அரசு)

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு