மங்கோலியா உச்சநீதிமன்றம்

மங்கோலியா உச்ச நீதிமன்றம் மங்கோலியா நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகார வரம்பினைக் கொண்ட உச்ச நீதிமன்றமாகும். இது நாட்டின் தலைநகர் உலான் பாடர் இல் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதன் அதிகார எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது. .

மங்கோலியா உச்சநீதிமன்றம்
நிறுவப்பட்டது1927
அமைவிடம்உலான் பாடர்
அதிகாரமளிப்புமங்கோலியா அரசியலமைப்புச் சட்டம்
நீதியரசர் பதவிக்காலம்70
வலைத்தளம்http://www.supremecourt.mn/

நீதிமன்றத்தின் அரசியலமைப்பு தொகு

  இது மங்கோலியாவின் அரசியலமைப்பின் பிரிவு 48 (1) ஆல் நிறுவப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு அரசியலமைப்பு 50 (1) வது பிரிவில் "உச்ச நீதிமன்றம் மிக உயர்ந்த நீதித்துறை அமைப்பாக இருக்கும்" என்று கூறுகிறது

அமைப்பு தொகு

உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி மற்றும் 24 துணை நீதிபதிகள் உள்ளனர். தலைமை நீதிபதி மங்கோலியாவின் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். நீதிபதி ஆறு வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார்.

  தற்போது, நீதிபதிகள் மூன்று தனித்தனி அறைகள் மூலம் வழக்குகளை நிர்வகிக்கிறார்கள்: குற்றவியல் வழக்குகளுக்கான அறை, நிர்வாக வழக்குகளுக்கான அறை மற்றும் சிவில் வழக்குகளுக்கான அறை. ஒவ்வொரு அறைக்கு முன்பும் வரும் வழக்குகள் பொதுவாக ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவால் கேட்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு