மணிக்குரல் (இலங்கைச் சிற்றிதழ்)

மணிக்குரல் இலங்கையில் கல்ஹின்னை எனும் இடத்திலிருந்து 1961ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய இலக்கிய மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • கவிஞர் எம். சீ. எம். சுபைர்

வெளியீடு தொகு

  • கல்ஹின்னை மாணவர் சங்கம்

இதன் செயலாளராக இருந்த இவர் பின்பு தலைவர் ஆகப் பணியாற்றியுள்ளார். 1967 வரை மணிக்குரல் வெளிவந்துள்ளது.

மணிக்குரல் பதிப்பகம் தொகு

பின்பு "மணிக்குரல் பதிப்பகம்" எனும் பெயரில் பதிப்பகம் தொடங்கி, பல இசுலாமிய இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

உள்ளடக்கம் தொகு

இலங்கை எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், வினாவிடைகள், வாசகர் பக்கம் என்பன இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.