மத்தி (சங்ககால மன்னர்)

மத்தி சங்ககால மன்னர்களில் ஒருவன். இவனது தலைநகர் வெண்ணி. மத்திக்கும் கல்லா எழினி என்பவனுக்கும் இடையே போர் மூண்டது. போரில் கல்லா எழினியின் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து மத்தி தன் கோட்டையின் வாயில் கதவில் பதித்துக்கொண்டான். பதித்த பல் வெண்மணி போல் விளங்கியதால் வெண்மணி என்னும் ஊரின் பெயரே வெண்மணிவாயில் என வழங்கப்படுவதாயிற்று. [1]

அடிக்குறிப்பு தொகு

  1. கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
    நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
    கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
    வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
    மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை, 15
    நீர் ஒலித்தன்ன பேஎர்
    அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே - அகநானூறு 211
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தி_(சங்ககால_மன்னர்)&oldid=2567862" இலிருந்து மீள்விக்கப்பட்டது