மரியா ரபோல்ஸ் பள்ளி

மரியா ரபோல்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி (Maria Rafols Matric Higher Secondary School) இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம், மண்டைகாட்டில் அமைந்துள்ள ஒரு ஆங்கில வழி சுயநிதி பள்ளி ஆகும். சேரிட்டி ஆஃப் செயின்ட் ஆன் சகோதரிகளால் 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நடத்தப்பட்டுவருகிறது. படிப்படியாக பள்ளி மேல்நிலைபள்ளியாக மேம்படுத்தப்பட்டது. இது கத்தோலிக்க மாணவர்களுக்கான சேர்க்கைக்கு முதன்மையளிக்கும் ஒரு கிறிஸ்தவ இருபாலா் சிறுபான்மை பள்ளிக்கூடம். இருப்பினும், மற்ற மதங்களின் குழந்தைகளும் அனுமதிக்கப்படுகிறார்கள்.[1][2][3]

மரியா ரபோல்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
அமைவிடம்
மண்டைக்காடு
இந்தியா
அமைவிடம்8°09′33″N 77°16′57″E / 8.159095°N 77.282625°E / 8.159095; 77.282625
தகவல்
வகைசுயநிதி
தொடக்கம்சூன் 1, 1994 (1994-06-01)
பள்ளி மாவட்டம்குழித்துறை
அதிபர்ஜூலியட்
தரங்கள்மழலை முதல் 12 வரை
மொத்த சேர்க்கை1000 (தோராயமாக)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "MATRICULATION SCHOOLS" (PDF). Kanyakumari. பார்க்கப்பட்ட நாள் 19 September 2015.
  2. "General Information". Webs. பார்க்கப்பட்ட நாள் 19 September 2015.
  3. "Maria Rafols Matric School, Kanyakumari - Admissions to 2016 - 2017 Academic Year". India study channel. பார்க்கப்பட்ட நாள் 19 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_ரபோல்ஸ்_பள்ளி&oldid=3365893" இலிருந்து மீள்விக்கப்பட்டது