திருக்கண்ணன்

(மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலையமான்
ஆட்சி மொழி தமிழ்
குலப்பெயர் மலையமான்
தலைநகரம் திருக்கோயிலூர்

மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவன் கபிலர் பாடிய முள்ளூர் மலையில் இருந்துகொண்டு ஆண்ட குறுநில மன்னன். சிறந்த கொடையாளி. வளவனின் கொடி இவனது கோட்டையில் பறந்தது. சோழநாடு அரசன் இல்லாமல் வாடிய காலத்தில் அங்கு ஆட்சி நிலைபெற உதவியவன். [1]

இவன் மலையமான் திருமுடிக்காரியின் மகன் எனவும், தன் தந்தை காரி உதவியதை போலவே, இத்திருக்கண்ணனும் சோழன் கிள்ளிவளவனின் ஆட்சியை மீட்க கிள்ளிவளவனுக்கு உதவினான் எனவும் கருதுகின்றனர்.

அடிக்குறிப்பு தொகு

  1. புறநானூறு 174
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கண்ணன்&oldid=3593303" இலிருந்து மீள்விக்கப்பட்டது