மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி

மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி என்பவர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமை அதிகாரியாவார். இவர் உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகள் துணையுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நிருவாகங்களைக் கண்காணிப்பு செய்து பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொளகிறார். இந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடம் மாவட்டக் கல்வி அதிகாரி நிலையிலானது.