முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்

பல்கலைக்கழகம் வழங்கும் ஏதாவது ஒரு பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று அதன் பின்பு கல்வியியலில் இளங்கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு எனப்படும் மேல்நிலை வகுப்புகளுக்கு அவர்கள் பயிற்சி பெற்ற பட்டப்படிப்புகளுக்கு ஏற்ற பாடங்களுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.