முத்துப்பேட்டை (இராமநாதபுரம் மாவட்டம்)

முத்துப்பேட்டை (muththupettai) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிற்றூராகும். இது திருப்புல்லாணி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. வங்காள விரிகுடாக் கடலோரம் உள்ளது. முன்பொரு காலத்தில் முத்துக் குளித்தலில் சிறந்து விளங்கிய இக் கிராமம் முத்து வணிகம் ந்டைபெறும் இடமாக விளங்கியதால் இது முத்துப்பேட்டை எனப் பெயர் பெற்றது. இக் கடற்கரையில் மாலை நேரத்தில் நின்றால் பாம்பன் பாலத்தில் விளக்குகள் ஒளிரும் காட்சி தெரியும். இக் கடற்கரைக்கு மிக அருகில் நல்ல தண்ணீர்த் தீவு, உப்புத்தண்ணீர்த் தீவு, முயல் தீவு, குருசடித் தீவு போன்ற தீவுகள் உள்ளன.