யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2007

யாழ் இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இலங்கை இலக்கிய பேரவையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழாவும் 2009 மே மாதம்\ பதினேழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெற்றது.

2007 ஆம் ஆண்டுக்கான விருது பெற்ற நூல்கள் தொகு

  • ஆய்வு - தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டாரியல் - மருதூர் ஏ.மஜீத்
  • புதினம் - மீண்டும் வருவேன் - செங்கை ஆழியான்
  • சிறுகதை - வரால் மீன்கள் - எம்.எஸ்.அமருல்லா

• கவிதை - இரண்டு கார்த்திகைப் பறவைகள் - எஸ்.புஷ்பானந்தன்

• காவியம் - தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்லை

• நாடகம் – அரங்கப்படையல்கள் - கலாபூஷணம் க.செல்லத்துரை

• சிறுவர் இலக்கியம் - மரம் வெட்டியும் இரு தேவதைகளும் - ஓ.கே.குணநாதன்

• சமயம் - வெளிச்சத்தின் வேர்கள் - தமிழ்நேசன்

•பல்துறை - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை - கலாநிதி செ. யோகராசா

• மொழிபெயர்ப்பு - பிளேக் கவிதைகள் - வைரமுத்து சுந்தரேசன்