ரெவரெண்ட் ஜெ. இ. கிரண்ட்லர்

' மேதகு ஜெ. இ. கிரண்டிலர் 1677 ஆண்டு ஏப்ரல் 7 ஆம் நாள் வெய்சென்சீ எனுமிடத்தில் பிறந்தார். கெலே எனுமிடத்தில் கல்வி பயின்றார். கோப்பனேகனில் 1708 இல் பாதிரியாராக அமர்த்தப்பட்டார்.

இந்திய வருகை தொகு

1708 ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் கப்பலேறி 1709 ஜூலை 20 ஆம் நாள் தரங்கம்பாடிக்கு வருகை புரிந்தார்.

திருமணம் தொகு

1716 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தமிழ்ப் பணி தொகு

தமிழ் மருந்துகள் எனும் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

இறப்பு தொகு

1720 ஆண்டு மார்ச் 19 ஆம் நாள் காலமானார். ஜெருசலம் மாதா கோயிலில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பார்வை நூல் தொகு

ஐரோப்பியர் தமிழ்ப்பணி, பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம். சென்னைப் பல்கலைக்கழகம் -- 2௦03