வசன சம்பிரதாயக் கதை
வசன சம்பிரதாயக் கதை என்பது 1775 ஆம் ஆண்டுய் முத்துக்குட்டிப் புலவர் அவரால் வாய்மொழியில் கூறப்பட்ட கதை ஆகும்.[1] தமிழில் வெளிவந்த முதல் புதினங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. [2]
பதிப்பு வரலாறு தொகு
இது ஏட்டுச் சுவடிகளில் எழுதப்பட்டது. பின்னர் அவை எவையும் கிடைக்காமல், நாகுபாரதிதான் வாய்மொழியில் நினைவில் வைத்திருந்த இக் கதையை 1895 ஆம் ஆண்டு ராமசாமிதீட்சிதர் அவரின் உதவியுடன் அச்சிடப்பட்டது. இந்த நூலை சிதைந்த நிலையில் ஈழத்தில் கண்டெடுத்த சிவபாதசுந்தரம் அதன் மூலத்தைப் படி எடுத்து வைத்தார். "அந்நூலில் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த சாற்றுகவிகள், முன்னுரைகள் ஆகியவற்றைப் படி எடுக்க இயலவில்லை". வசன சம்பிரதாயக் கதையின் மூலம் சிவபாதசுந்தரம் சக பணியாளாரான பெ.கோ.சுந்தர்ராஜனும் 2004 பதிப்பித்த கண்டெடுத்த கருவூலம் என்ற நூலில் இடம்பெறுகிறது.[1]