வத்திக்கான் நகரின் கர்தினால் செயலர்

வத்திக்கான் நகரின் கர்தினால் செயலர் அல்லது வத்திக்கான் நகருக்கான திருத்தந்தையின் செயலர் அல்லது திருப்பீடச் செயலர் என்பவர் உரோமை செயலகங்களில் முகவும் குறிக்கத்தக்கதும், பழையதுமான வத்திக்கான் செயலகத்தின் தலைவர் ஆவர்.[1] வத்திக்கான் நகர் மற்றும் திருப்பீடம் ஆகியவற்றின் அரசியல் மற்றும் வெளியுறவு செயல்பாடுகளை இச்செயலகம் திருத்தந்தையின் பெயரால் செய்கின்றது. தற்போதய செயலர் கர்தினால் பெத்ரோ பெரோலின் ஆவார்.[2]

செயலரை நியமிப்பவர் திருத்தந்தை ஆவார். இப்பதவியினை வகிப்பவர் ஒரு கர்தினாலாக இருக்க வேண்டும். இப்பதவி இடம் காலியானால், கர்தினால் அல்லாத ஒருவர் சார்பு-நிலை செயலராக (Pro-Secretary) இப்பதவியினை வகிக்கலாம். திருத்தந்தையின் ஆட்சிப்பீடம் காலியாகும் போது இவரின் பதவிக்காலம் முடிவுறும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Profile: The Secretariat of State". The Holy See. பார்க்கப்பட்ட நாள் 2007-04-18.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-22. பார்க்கப்பட்ட நாள் 2015-02-25.