வலைவாசல்:கருநாடக இசை/உங்களுக்குத்தெரியுமா/சனி

  • கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் ஒரு இசை வடிவம் இராகம் தானம் பல்லவி என அழைக்கப்படும். இது இராக ஆலாபனை, தானம், நிரவல் மற்றும் கல்பனஸ்வரா ஆகியவை ஒருங்கிணைந்து அமைந்த இசை வடிவம் ஆகும்
  • சண்முகப்பிரியா கருநாடக இசையின் 56வது மேளகர்த்தா இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரம் அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.
  • தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்.