வானில் பறக்கும் புள்ளெலாம் (நூல்)

வானில் பறக்கும் புள்ளெலாம் என்பது சு. தியடோர் பாசுக்கரன் எழுதிய சூழலியல் பற்றிய மூன்றாவது கட்டுரைத் தொகுதி. இந்நூலில் காட்டுயிர்கள், அவற்றின் வாழ்விடங்கள், மொழி, உரையாடல்கள் என்னும் பகுப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளிவந்தவை. இந்நூல் உயிர்மை பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.