இயற்பெயர்:வீ.பாரதிராஜா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் 03-06-1989 அன்று உ.வீரமுத்து லெட்சுமி அம்மையாருக்குப் பிறந்தார். இவர் இளமையிலயே கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவர். முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனது சொந்த கிராமத்தில் படித்து பின்னர் நடுநிலைப்படிப்புக்கு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடார தாலுகா சில்லாங்குளம் எம்.கே.என் மேல்நிலைப்பள்ளியில் பயின்று பத்தாம் அவகுப்பில் 416 மதிப்பெண் எடுத்தார். பின்னர் மணப்பாடு மேல்நிலை வகுப்புகளை முடித்து தனது சொந்த மாவட்டத்திலுள்ள சேதுபதி அரசுக் கலைக்கல்லூரியில் இளங்கலை படித்து ,முதுகலை படிப்பில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பல்கலைக்கழக தங்கப்பதக்கம் பரிசினைப்பெற்றுள்ளார்.

கவிஞர் வாலியின் படைப்புகளில் உவமைகள் என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் ,

பின்பு கவிஞர் வாலியின் படைப்புகள் ஓர் ஆய்வு என்னும் அதலைப்பில் முனைவர் பட்ட ஆய்வாளராகவும் பயின்று வருகிறார்

வலைப்பூ http://mukavaivaalidhasan.blogspot.com/

முகநூல் https://www.facebook.com/mukavaivaalidhasan [1]

இயற்றிய நூல்கள்

௧.கைக்குட்டைக் காகிதங்கள்

௨.மீசை முறுக்கிய காடு

௩.பச்சையப்பன் கல்லூரி பைத்தியக்காரனின் ஒப்புதல் வாக்குமூலம்

௪.செல்லம்மாவுக்கு ஆகஸ்ட் பிறந்தநாள்


பெற்ற விருதுகள்:

௧ கவிமணி விருது

௨.எழுச்சி கவிஞர் விருது

௩.திருவள்ளுவர் விருது

௪.புரட்சிக்கனல் விருது

௫.எம்.ஜி.ஆர் விருது

௬.அம்மா விருது

௭.பாரதிதாசன் விருது

௮.பாரதியார் விருது

௯. உலக அளவில் முகநூல் புதுக்கவிதை விருது2017

இப்படி எண்ணிலடங்கா விருதுகள்


எழுதிய இதழ்கள்:

தினமணி-இளைஞர் மணி, கவிதை மணி

தினத்தந்தி

தினமலர்

தினகரன்

ஆனந்த விகடன் சொல்வனம்

குமுதம்

குங்குமம்

கணையாழி

இலக்கிய உலகில் சிற்றிதழ் முதல் பேரிதழ் வரை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலிதாசன்&oldid=3624643" இலிருந்து மீள்விக்கப்பட்டது