விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஜெயமோகன்

1962 இல் குமரி மாவட்டத்தில் திருவரம்பு என்ற ஊரில் பிறந்தவர். தமிழில் 1986 முதல் எழுதிவரும் எழுத்தாளர். தன்னுடைய விஷ்ணுபுரம் நாவலுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். திரைப்படங்களுக்கும் வசனம் எழுதி வருகிறார். இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. கதா விருது, சம்ஸ்கிருதி சம்மான் விருது, பாவலர் விருதுகளைப் பெற்றுள்ளார். www.jeyamohan.in என்ற இணையதளத்தில் தொடர்ந்து இவருடைய படைப்புகள் வெளியாகின்றன.