வி. கே. எசு. சிவக்குமார்

வி. கே. எசு. சிவக்குமார் புதுச்சேரி ஒன்றியப்பகுதியை சேர்ந்த அரசியல்வாதி. 1980 முதல் திருமலை ராயன் பட்டிண சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். புதுச்சேரி மாநிலத்தில் விவசாயத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 1996-2000 வரை சபாநாயகராகப் பணியாற்றியுள்ளார். மூன்று முறை திமுக சார்பாகவும் ஒரு முறை கட்சி சார்பற்றவராகவும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 2011ஆம் ஆண்டு திமுக கலக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். ஏப்பிரல் 2016 இல் அதிமுகவில் இணைந்தார். [1][2]2016ஆம் ஆண்டு நிரவி பட்டினத்தில் (திருமலை ராயன் பட்டினம்) அதிமுக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மரணம் தொகு

2 சனவரி 2017 அன்று தன்னுடைய திருமண மண்டப கட்டுமானப்பணியை மேற்பார்வையிட சென்ற போது காரைக்காலில் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். [3][4]


மேற்கோள்கள் தொகு

  1. "Independent Puducherry MLA Sivakumar joins AIADMK". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 3, 2017.
  2. "V.M.C. Sivakumar joins AIADMK". இந்து. பார்க்கப்பட்ட நாள் சனவரி 3, 2017.
  3. "Former Puducherry minister VMC Sivakumar hacked to death". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 3, 2017.
  4. "Puducherry leader VMC Sivakumar hacked to death". இந்து. பார்க்கப்பட்ட நாள் சனவரி 3, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._எசு._சிவக்குமார்&oldid=3194572" இலிருந்து மீள்விக்கப்பட்டது