ஐயவி
(வெண்சிறு கடுகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐயவி என்பது கடுகின் வகைகளில் வெண்சிறுகடுகு ஆகும்.
கருங்கடுகு (black mustard) (Brassica nigra), கேழ்க்கருகு (brown Indian mustard) (B. juncea), and வெண்சிறு கடுகு (white mustard) (B. hirta/Sinapis alba). போன்றவை கடுகின் வகைகள்.


கேழ்க்கடுகு (பழுப்புநிறக் கடுகு) இக்காலத்தில் தாளிக்கப் பயன்படுகிறது.
வெண்சிறுகடுகு பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாங்கைச் சங்கநூல்கள் தெரிவிக்கின்றன.
ஐயவிப் பயிர் தொகு
ஐயவி எண்ணெய் தொகு
எள் தரும் (நல்)எண்ணெய் போன்று ஐயவி எண்ணெய் தரும் வித்து.
- குழந்தை பெற்ற தாயை ஐயவி பூசி நீராட்டுவர்.[4]
- முழந்தையின் தலை முச்சியில் ஐயவி அப்புவர் [5]
- குழந்தை பெற்ற தாய்க்கு ஐயவிப் புகை காட்டுவர்.[6]
- இழவு வீட்டில் ஐயவி சிதறுவர்.[7]
- முருகாற்றுப்படுக்கும் வீட்டு விழாவில் முருகாற்றுப்படுக்கும் பெண்ணின் மேல் எண்ணெயோடு கூடிய ஐயவியைத் தடவுவர்.[8]
- போரின்போது சமாதான அடையாளமாக ஐயவி புகைப்பர்.[9]
- தவம் செய்வோர் ஐயவிப் புகையைக் கைவிட்டது போலக் காதலன் தன்னைக் கைவிட்டான் என்கிறாள் ஒரு தலைவி.[10]
- அரண்மனை மதில் கதவு எளிதாகச் சுழல ஐயவி எண்ணெய் அப்பியிருந்தனர்.[11]
ஐயவித் தாழ்மரம் தொகு
ஆரல்மீன் முட்டை தொகு
- ஆரல்மீன் முட்டையையும் ஐயவி என்றனர். (இதனை அக்காலத்தில் எண்ணெய் எடுக்கப்பட்ட மீன் எனலாம்) கொக்குக் குஞ்சுகள் ஆரல் ஈன்ற ஐயவி முட்டையையும், இறால் ஈன்ற பிள்ளைகளையும் இரையாக உண்ணும்.[14]
இவற்றையும் பார்க்க தொகு
அடிக்குறிப்பு தொகு
- ↑ நெடுங்கால் ஐயவி மதுரைக்காஞ்சி 287
- ↑ தொய்யாது வித்திய துளர்படு துடவை, ஐயவி அமன்ற வெண்கால் செறுவில், மை என விரிந்தன நீல் நறு நெய்தல் - மலைபடுகடாம் 123
- ↑ ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் குறுந்தொகை 50
- ↑ நற்றிணை 40, 370
- ↑ மணிமேகலை 3-134,
- ↑ அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை, விரவிய மகளிர் ஏந்திய தூபம் - மணிமேகலை 7-73
- ↑ புறநானூறு 281-4, 296-2,
- ↑ திருமுருகாற்றுப்படை 228
- ↑ நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும் கூற்றத்து அனையை - புறநானூறு 98-15,
- ↑ தவத்துக்கு ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் கைவிட்டனரே காதலர் - புறநானூறு 358-4
- ↑ ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை - நெடுநல்வாடை 86
- ↑ பூணா ஐயவி தூக்கிய மதில - பதிற்றுப்பத்து 16-4,
- ↑ ஓங்குநிலை வாயில் தூங்குபு தகைத்த, வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவி - பதிற்றுப்பத்து 22-23
- ↑ புறநானூறு 342-9,