வேனிற்பள்ளி

வேனிற்பள்ளி என்பது சங்க காலத் தமிழர் கட்டட அமைப்புகளில் ஒன்றாகும். எழுநிலை மாடங்கள் அமைந்த மாளிகைகளில் ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்ப மாடங்கள் கட்டப்பட்டன. அவற்றுள் வேனிற்கால வெம்மைக்கேற்றாற்போல் அமைக்கப்பட்ட மாடம் வேனிற்பள்ளி எனப்படும். இம்மாடங்களில் காற்று தாராளமாய் வரும் வகையில் வாயில்களுக்கு நேராகச் சாளரங்கள்(சன்னல்) அமைக்கப்பட்டன. இத்தகைய அமைப்பை நேர்வாய்க்கட்டளை எனக் குறிப்பிட்டனர்.[1]

 வானுற நிவந்த மேனிலை மருங்கில்
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை[2]

மேற்கோள்கள் தொகு

  1. முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள் பக்கம் 16.(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை)
  2. நெடுநல்வாடை(60-62)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேனிற்பள்ளி&oldid=1405162" இலிருந்து மீள்விக்கப்பட்டது