வேல மரங்கள் முட்கள் நிறைந்தவை. தமிழரின் வரலாற்றோடு தொடர்புடையவை. இந்த மரத்தில் இருந்துதான் விவசாயிகள் ஏர் உழுவதற்குண்டான கலப்பையைத் தயாரிக்கின்றனர். இந்த மரத்தைத் தண்ணீரில் சிறிது காலம் ஊறவைத்து எடுத்த பின்னர், அதில் பொருள்களைச் செய்தால் நூறாண்டுகள் தாண்டியும் அந்தப் பொருள்கள் உறுதியாக இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் இம்மரம் செல்லரித்துப் போகாது. நீர்நிலைகளில் தாக்குப்பிடித்து வளரும் இந்த மரங்கள் மிகவும் உறுதி வாய்ந்தவை. மழை நீர் மிக எளிதாக பூமிக்குள் இறங்கும் வகையில் இதன் ஆணி வேர்கள் இருக்கின்றன. இம்மரங்கள் வைரம் பாய்ந்து கருமை நிறத்தில் மிக உறுதியாக இருப்பவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலமரம்&oldid=3598953" இலிருந்து மீள்விக்கப்பட்டது