வேளாக்குறிச்சி

வேளாக்குறிச்சி, தமிழ்நாட்டின் 33வது மாவட்டமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது.

வேளாக்குறிச்சி ஊராட்சி இது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது வேளாக்குறிச்சி ஊராட்சி (Velakurichi Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தியாகதுர்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2382 ஆகும். இவர்களில் பெண்கள் 1200 பேரும் ஆண்கள் 1182 பேரும் உள்ளனர்.

வேளாக்குறிச்சி — ஊராட்சி — அமைவிடம் நாடு இந்தியா மாநிலம் தமிழ்நாடு மாவட்டம் விழுப்புரம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1] முதலமைச்சர் க. பழனிசாமி மாவட்ட ஆட்சியர் எம் . லட்சுமி இ. ஆ. ப. ஊராட்சித் தலைவர் மக்களவைத் தொகுதி கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் Dr. K. Kamaraj(அஇஅதிமுக)

சட்டமன்றத் தொகுதி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு (அதிமுக)

மக்கள் தொகை 2,382 நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30) அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை குடிநீர் இணைப்புகள் 76 சிறு மின்விசைக் குழாய்கள் 8 கைக்குழாய்கள் 9 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளாட்சிக் கட்டடங்கள் 8 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1 ஊரணிகள் அல்லது குளங்கள் 6 விளையாட்டு மையங்கள் 1 சந்தைகள் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 52 ஊராட்சிச் சாலைகள் 3 பேருந்து நிலையங்கள் சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3

கோயில்கள் தொகு

  • அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
  • அருள்மிகு மழைகுளி மாரியம்மன் திருக்கோயில்
  • பஞ்சாயி அம்மன் திருக்கோயில்
  • திரௌபதி அம்மன் திருக்கோயில்,
  • ஐயனார் திருக்கோயில்
  • சடையப்பார் திருக்கோயில்
  • கங்கையம்மன் திருக்கோயில்
  • பிள்ளையார் கோயில்கள்
  • பெருமாள் கம்பம்
  • காளியம்மன் திருக்கோயில்
  • பெரியாயி அம்மன் திருக்கோயில்
  • ஆனந்தியம்மன் திருக்கோயில்.
  • குழந்தை இயேசு தேவாலயம்

மக்களின் தொழில்கள் தொகு

உழவுதொழில் முதன்மையான தொழிலாக விளங்குகிறது. பருத்தி, சோளம், துவரை, நெல், கரும்பு, மிளகாய், வெண்டை, முருங்கை, பனைமரத்து எண்ணெய் (பாமாயில்), கத்தரி, மருத்துவப்பயிர், தீவனப்பயிர், புளிச்சை, அவரை, உளுந்து போன்றவை பயிரிடப்படுகிறது. கால்நடைகளான மாடு, ஆடு, கோழி, புறா ஆகியவை வளர்க்கப்படுகின்றன. கோழிப்பண்ணை ஒன்றும் இயங்கி வருகிறது. விவாசய கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாக்குறிச்சி&oldid=3600796" இலிருந்து மீள்விக்கப்பட்டது