நள சோப்ரா (Nala sopara), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய்-விரார் மாநகராட்சியின் பகுதியாக தற்போது உள்ளது. பண்டைய இந்தியாவை ஆண்ட சாதவாகனர் ஆட்சியில் இந்நகரம் முக்கிய நிர்வாக மையமாகவும், பௌத்த சமயத்தின் புகழிடமாகவும் திகழ்ந்தது. நளசோப்ராவில் அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டு உள்ளது.

நளசோப்ரா
நகரம்
அடைபெயர்(கள்): சோப்ரா
நளசோப்ரா is located in மகாராட்டிரம்
நளசோப்ரா
நளசோப்ரா
நளசோப்ரா is located in இந்தியா
நளசோப்ரா
நளசோப்ரா
ஆள்கூறுகள்: 19°24′55″N 72°51′41″E / 19.4154°N 72.8613°E / 19.4154; 72.8613
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்பால்கர்
நகரம்வசாய்-விரார்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்வசாய்-விரார் மாநகராட்சி [1]
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4.6 lakh
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்401 209(கிழக்கிற்கு) 401 203(for west)
தொலைபேசி குறியீடு0250
வாகனப் பதிவுMH48
சட்டமன்றத் தொகுதிநளசோப்ரா

சோப்ரா தொல்லியல் களம் தொகு

 
நள சோப்ராவின் பௌத்த தூபி
 
கௌதம புத்தரின் சிலை, நள சோப்ரா

கல்வெட்டுயியல் மற்றும் தொல்லியல் அறிஞருமான பகவால்லால் இந்திரஜித் என்பவர் நள சோப்ரா அருகில் உள்ள மெர்தெஸ் எனும் கிராமத்தின் தொல்லியல் களத்தை 1982-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்த போது, சிதிலமடைந்த பௌத்த தூபியின் அருகில், கிபி 8-9வது நூற்றாண்டு காலத்திய பெரிய அளவிலான வெண்கலப் பேழையில் 8 மைத்திரேயர் செப்புச் சிலைகளையும், தங்கப் பூக்களையும், பிட்சைப் பாத்திரங்களையும் மற்றும் சாதவாகனப் பேரரசர் கௌதமிபுத்ர சதகர்ணியின் நாணயத்தையும் கண்டுபிடித்தார்.

நளசோப்ரா தொல்லியல் களத்தை இந்தியத்தொல்லியல் ஆய்வகத்தின் ஆய்வாளர் எம். எம். குரேஷி 1939-1940களில் அகழாய்வு செய்த போது,இரண்டு சிறிய தூபிகளை கண்டெடுத்தார்.[2]1956-ஆம் ஆண்டில் மீண்டும் அகழாய்வு செய்த போது 11-வது நூற்றாண்டின் அசோகரின் பெரிய பாறைக் கல்வெட்டு துண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.[3]1993-இல் அகழாய்வு செய்த போது, வட்ட வடிவக் கிணறும், பண்டைய ரோமானியர்களின் மெருகூட்டப்பட்ட காவி நிறக் குடுவைகளும், கண்ணாடித் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

அசோகரின் எட்டாவது பெரும் பாறைக் கல்வெட்டு தொகு

 
அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டு, நள சோப்ரா
 
அசோகர் கல்வெட்டின் நகல் (பிராமி எழுத்தில்), நள சோப்ரா

ஏ. எல். பசாம் என்பவர் நள சோப்ராவின் அசோகரின் எட்டாவது பெரும் பாறைக் கல்வெட்டின் குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுத்துபெயர்ப்பு செய்தார்.[4]இக்கல்வெட்டில் பேரரசர் அசோகர், புத்தர் அருளிய மக்கள் அறவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் செய்யவேண்டிய அறச்செயல்கள் குறித்துள்ளார். அசோகர் தம்மை தேவனாம் பிரியதர்சி ("Devanampiya") (Beloved of The Gods) என்றும் பிரியதசி ("Piyadassi" ) (The handsome one) என்றும் குறித்துள்ளார்.

 
 
உதயகோலம்
 
நித்தூர்
 
Jatinga
 
Rajula Mandagiri

மேற்கோள்கள் தொகு

  1. Vasai-Virar City Municipal Corporation]
  2. Onshore and Nearshore Explorations along the Maharashtra Coast: with a View to Locating Ancient Ports and Submerged Sites. 
  3. Ghosh, A. (ed.) (1993) [1956]. "Indian Archaeology 1955-56 - A Review" (PDF). Archaeological Survey of India. p. 29. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18. {{cite web}}: |first= has generic name (help)
  4. Aśoka and the Decline of the Mauryas (Third Edition);Oxford University Press;Pg.380-381
"https://ta.wikipedia.org/w/index.php?title=நள_சோப்ரா&oldid=3331530" இலிருந்து மீள்விக்கப்பட்டது