அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு

அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு என்பது தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் புலம்பெயர் வாழ் தமிழ்ச் சிறார்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வு ஆகும். 2008 மே 3 ஆம் நாள் இத்தேர்வில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 17,500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 2007 ஆம் ஆண்டைவிட இவ்வாண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2008 பொதுத் தேர்வில் பங்கேற்றவர்கள் விவரம்
நாடு மாணவர் எண்ணிக்கை
ஜேர்மனி 5557
பிரான்ஸ் 2880
இலண்டன் 1993
நோர்வே 1330
டென்மார்க் 1030
நெதர்லாந்து 300
இத்தாலி 160
சுவீடன் 90
பெல்ஜியம் 7
சுவிட்சர்லாந்து 4136
நியூசிலாந்து 35