அரிசில் ஆறு

அரிசில் ஆறு (Arisil) என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றின் கிளை ஆறு ஆகும்.[1] பல்வேறு தமிழ் சாம்ராஜ்யங்களுக்கு இடையே பல போர்கள் நடந்த இடமாக இது இருந்தது. நிருபதுங்க பல்லவனுக்கும் சீமாறன் என்ற பாண்டியனுக்கும் இடையே 9ஆம் நூற்றாண்டில் நடந்த போர் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதில் பிந்தையவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். மூன்றாம் நந்திவர்மனுக்கும் மகன் ராட்டிரகூட இளவரசிக்கும் பிறந்தவன் நிருபதுங்கா.[2][3] பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற தமிழ் நூலின் 10வது அத்தியாயத்திலும் அரிசில் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]

இலக்கியத்தில் தொகு

  • நற்றிணை 141

வெள்ளம் குறைந்த காலத்தில் இதன் மணல் அறல் அறலாகப் படிந்து அழகாகக் காணப்படும். இந்த மணல்-படிவைச் சல்லியங்குமரனார் தன் பாடல் தலைவியின் கூந்தலுக்கு உவமையாக்கிக்கொண்டுள்ளார். இது ஓடும் பகுதியில் அம்பர் என்னும் ஊர் சங்ககாலத்தில் மிகவும் புகழ்பெற்ற ஊராகத் திகழ்ந்தது. இந்த ஊரின் அரசன் கிள்ளி.'இசைவெங்கிள்ளி' என்று போற்றப்படுகிறான். இவன் யானைமேல் சென்று போரிட்டான். போர் சோழனின் அம்பர் நகரில் நடைபெற்றது. அம்பர் நகரைத் தாக்கியவன் பாண்டில் (பாண்டியன்). போரில் கிள்ளி வெற்றி பெற்றான்.

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Sailendra Nath Sen. Ancient Indian History and Civilization. New Age International, 1999 - India - 668 pages. பக். 449. 
  2. Indian History. Allied Publishers. பக். A-422. 
  3. Kallidaikurichi Aiyah Nilakanta Sastri. The Culture and History of the Tamils. K. L. Mukhopadhyay, 1964 - Tamil (Indic people) - 181 pages. பக். 26. 
  4. Kalki Krishnamurthy. Ponniyin Selvan. Vanathi Pathippagam, 1954. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசில்_ஆறு&oldid=3628663" இலிருந்து மீள்விக்கப்பட்டது