அரியல் என்பது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஒருவித பானம்.

அரியல் பற்றிய சங்கப்பாடல் குறிப்புகள் தொகு

  • இதனைப் புலவர் வேம்பற்றூர்க் குமரனார் 'அரி நிறக் கலுழி' [1] என்று குறிப்பிடுகிறார். அகன்ற வாயுடைய பானையில் பாளை சுரக்கும் நீர் அது என்றும் அதனை விவரிக்கிறார். [2]

அரியற் பெண்டிர்

  • அரியல் விற்பவர்கள் அரியல் பெண்டிர். அரியலை அவர்கள் அளந்து ஊற்றி விற்பார்களாம்.

செங்கண் ஆடவர்

  • அரியல் பெண்டிரிடம் அரியலை வாங்கி வேண்டிய அளவு குடித்துவிட்டு போரை விரும்பிச் செங்கண் ஆடவர் எதிரொலி கேட்கும்படி ஆரவாரம் செய்வார்களாம்.

அடிக்குறிப்பு தொகு

  1. முத்து நிறச் சாறு
  2. அகநானூறு 157
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியல்&oldid=1387555" இலிருந்து மீள்விக்கப்பட்டது