அறநெறிச்சாரம்

அறநெறிச்சாரம் என்பது ஒரு தமிழ் நீதி நூல். அறத்தின் வழியைப் பிழிந்து சாரமாகத் தருவதால் இப்பெயர் ஏற்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் முனைப்பாடியார் என்னும் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 226 வெண்பாக்கள் உள்ளன.

பாடல் - எடுத்துக்காட்டு தொகு

  • செருக்கு எட்டும் பயன்படாது

அறிவுடைமை, மீக்கூற்றம், ஆன குலனே,
உறுவலி, நல்தவம், ஓங்கிய செல்வம்
பொறிவனப்பில், எம்போல்வார் இல்என்னும் எட்டும்
இறுதிக்கண் ஏமாப்(பு) இல [1]

  • தாய்

காலொடு கைஅமுக்கிப் பிள்ளையை வாய்நெறித்து
பாலொடு நெய்பெய்யும் தாய்அனையர் [2]

  • உயிருக்கும் கூத்தாடிக்கும் சிலேடை

அங்கம் அறஆடி அங்கே படம்மறைத்து
அங்கே ஒருவண்ணம் கோடலால் - என்றும்
அரங்காடு கூத்தனே போலும் உயிர்தான்
நுழன்றாடு தோற்றப் பொலிவு [3]


மேற்கோள்கள் தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. பாடல் 65
  2. சான்றோர் - பாடல் 96

  3. பாடல் 121
    • கூத்தாடி உடலுறுப்புகள் நோகுப்படி ஆடுவான். திரையில் மறைந்துகொள்வான். வண்ணம் பூசிக்கொண்டு வேறொருவனாகத் தோன்றுவான்.
    • உயிர் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பிலும் இருக்கும். உடல் என்னும் படத்துக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும். எண்ணம் மாறுவதாலே ஒருவன் வெவ்வேறு வண்ணத்தனாக இருப்பான்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறநெறிச்சாரம்&oldid=3605787" இலிருந்து மீள்விக்கப்பட்டது