அலெக்சாண்டர் துபியான்சுகி

உருசிய தமிழறிஞர்

அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்சுகி (Alexander Dubyanskiy, உருசியம்: Алекса́ндр Миха́йлович Дубя́нский, ஏப்ரல் 27, 1941 - நவம்பர் 18, 2020)[1] என்பவர் உருசியத் தமிழ்ப் பேராசிரியராவர். இவர் உருசியாவில் மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார்.[2] அத்துடன் தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர்.

பேரா. அலெக்சாண்டர் துபியான்சுகி
Prof. Alexander Duyansky
பிறப்புஏப்ரல் 27, 1941(1941-04-27)
மொஸ்கோ, உருசியா
இறப்புநவம்பர் 18, 2020(2020-11-18) (அகவை 79)
மாஸ்கோ
இறப்பிற்கான
காரணம்
கோவிட்-19 பெருந்தொற்று
தேசியம்உருசியர்
பணிபேராசிரியர்
பணியகம்மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதமிழறிஞர்

தமிழ்ப் பணி தொகு

மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வந்த இவர்,[3] உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வந்வர்களில் ஒருவராவார். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்தியம்பியதுடன், தமிழ்நாட்டு பேச்சு தமிழில் உரையாடவும் கூடியவராக இருந்தார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Скончался Александр Михайлович Дубянский பரணிடப்பட்டது 2020-11-18 at the வந்தவழி இயந்திரம், மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
  2. "Tolkappiyam is not dependent on Sanskrit sources: Tamil scholar". http://www.thehindu.com/news/states/tamil-nadu/article489121.ece. 
  3. "Prof Dubyanskiy is currently teaching Tamil and Indian literature in the Moscow State University.". http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/344280/1/.html. 
  4. Dr Dubyanskiy Alexander speech in Tamil