அ. க. நவநீதகிருட்டிணன்

திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்

அ. க. நவநீதகிருட்டிணன் (அ. கங்காதர நவநீதகிருஷ்ணன்) (1921 – 1967). நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இவரது 19 நூல்கள் 2009-10 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது மரபுரிமையாளர்களுக்கு பரிவுத்தொகையாக 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது.[1][2]

வரலாறு தொகு

திருநெல்வேலி மாவட்டத்திலே, அம்பாசமுத்திரத்துக்கு அருகிலுள்ள ஊர்க்காடு என்னும் சிற்றூரில் பிறந்தவர் நவநீத கிருஷ்ணன். இவர் தந்தையார் அங்குள்ள குறுநிலமன்னரின் அவைக்களப் புலவராக விளங்கியிருந்த ’அரசவரகவி’ அங்கப்ப பிள்ளையென்பவர். அவருடைய மக்கள் மூவரில், நடுவர் தான் கங்காதர நவநீத கிருஷ்ணன். இவர் கல்வி பயிலும்போது நாவலர் நெடுஞ்செழியனும், பேராசிரியர் அன்பழகனும், அண்ணாமலையில் கல்வி பயின்று கொண்டிருந்தனர்.[3]

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தொகு

இவரது நாட்டுடையாக்கப்பட்டுள்ள 19 நூல்களின் பட்டியல்[4]:

  1. அறநூல் தந்த அறிவாளர்
  2. இலக்கிய அமைச்சர்கள்
  3. இலக்கியத் தூதர்கள்
  4. ஔவையார் கதை
  5. கண்ணகி கதை
  6. காவியம் செய்த மூவர்
  7. கோப்பெருந்தேவியர்
  8. தமிழ் காத்த தலைவர்கள்
  9. தமிழ் வளர்த்த நகரங்கள்
  10. தமிழ் வளர்த்த கதை
  11. நாடகப் பண்புகள்
  12. பாரதியார் குயிற்பாட்டு
  13. முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்
  14. முதல் குடியரசுத்தலைவர்
  15. வள்ளலார் யார்
  16. வள்ளுவர் சொல்லமுதம் - தொகுதி 1
  17. வள்ளுவர் சொல்லமுதம் - தொகுதி 2
  18. வள்ளுவர் சொல்லமுதம் - தொகுதி 3
  19. வள்ளுவர் சொல்லமுதம் - தொகுதி 4

மேற்கோள்கள் தொகு

  1. http://dinamani.com/tamilnadu/article1147429.ece
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-09. பார்க்கப்பட்ட நாள் 2013-11-28.
  3. http://koottanchoru.wordpress.com/2009/04/25/அக-நவநீதகிருஷ்ணன்-1921-1967-நாட்/
  4. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-33.htm

வெளி இணைப்புகள் தொகு

http://thamizhagam.net/nationalized%20books/A.%20Ka.%20Navaneetha%20Krishnan.html பரணிடப்பட்டது 2015-05-14 at the வந்தவழி இயந்திரம் மிண் நூலகத்தில் அ. க. நவநீதகிருட்டிணன் நூல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._க._நவநீதகிருட்டிணன்&oldid=3915229" இலிருந்து மீள்விக்கப்பட்டது