ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோயில்

ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம் தொகு

வைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில் மணல்மேட்டினை அடுத்து, பந்தநல்லூர் சாலையில் திரும்பி கேசிங்கன் என்னும் ஊருக்கு அருகில் வலது புறத்தில் ஆத்தூர் உள்ளது.

இறைவன்,இறைவி தொகு

இக்கோயிலில் உள்ள இறைவன் மந்தாரவனேசுவரர் என்றும் சொர்ணபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி அஞ்சனாட்சி என்றும் அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார். [1]

சிறப்பு தொகு

நந்தி பூசித்த, தவளை முத்தி பெற்ற தலம் என்ற பெருமைகளை உடையது. மந்தார வனம் என்பதே மந்தாரம் ஆயிற்று என்பர். [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009