ஆபித் ஹசன் சப்ரானி

ஆபித் ஹசன் சப்ரானி (Abid Hasan Safrani 11 ஜூன் 1911 - 5 ஏப்ரல் 1984) இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய ஒரு அதிகாரி ஆவார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வெளியுறவு துறையின் மூலம் இந்திய தூதராக பல நாடுகளில் பணியாற்றினார்.

பிறப்பும் கல்வியும் தொகு

ஹைதராபாத்தில் காலனித்துவ எதிர்ப்பு குடும்பத்தில் பிறந்த ஆபித் ஹசன், ஜெர்மனிக்கு சென்று பொறியாளராக பயிற்சி பெற்றார்.

இந்திய தேசிய இராணுவத்தில் தொகு

இரண்டாம் உலகப் போர் நடைபெறத் துவங்கிய காலகட்டத்தில் ஜெர்மனியில் மாணவராக இருந்த ஆபித் ஹசன், அங்கிருந்த இந்தியக் கைதிகளிடம் உரையாற்றிய சுபாஷ் சந்திர போஸ்ஸின் பேச்சில் ஈர்க்கப்பட்டார். போஸை சந்தித்து சுதந்திர இந்தியப் படையணியில் சேர்ந்தார். போஸ் ஜெர்மனியில் இருந்து ஆதரவு திரட்டும்போது போஸின் தனிப்பட்ட செயலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

ஜெர்மனியில் இருந்து 1943 இல் தென்கிழக்கு ஆசியாவிற்கு போஸ் மேற்கொண்ட பயணத்தில் (ஜெர்மன் யு-போட் யு -80) இல் போஸுடன் பயணம் செய்தார். இந்திய தேசிய இராணுவத்தில் (ஐ.என்.ஏ) பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். மேலும் தென்கிழக்கு ஆசிய அளவில் நேதாஜியின் பிரச்சாரங்களின் போதும் உடன் பயணித்தார், ஹசன் இந்திய தேசிய இராணுவத்தில் ஒரு மேஜராகவும் உயர்ந்தார். இச்சமயத்தில்தான் அவர் குங்குமப்பூவின் புனித இந்து நிறத்திற்குப் பிறகு "சப்ரானி" ஐ தனது பெயருக்கு வகுப்புவாத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஏற்றுக்கொண்டார்.[1]

ஜெய் ஹிந்த் தொகு

வீரர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது அவரவர் மதத்தின் அடிப்படையில், இனத்தின் அடைப்படையில் வாழ்த்து கூறிவந்தனர். வீரர்கள் ஒன்றாக நின்று ஒருங்கிணைந்த இந்தியாவுக்காக போராட வேண்டும் அதற்கு பொதுவான ஒரு வார்த்தையை உருவாக்கும் பணியை ஆபிதிடம் போஸ் ஒப்படைத்தார். செண்பகராமன் பிள்ளை உருவாக்கிய இந்தியா வெல்க எனப் பொருள்படும் ஜெய் ஹிந்த் என்ற சொற்றொடரை இந்திய தேசிய இராணுவத்தினர் பயன்படுத்தப் பரிந்துரைத்தார்.[2][3]

ஐஎன்ஏ வழக்குகள் தொகு

இரண்டாம் உலகப் போரின் முடிவில் இந்திய தேசிய இராணுவ உறுப்பினர்கள் பலரும் கைது செய்யப்பட்டு ஐஎன்ஏ வழக்குகளின் கீழ் விசாரிக்கப்பட்டனர், ஆபிதும் விசாரணையின் முடிவில் விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், 1946 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

இந்திய தூதராக தொகு

பிரிவினைக்குப் பிறகு, ஹசன் ஹைதராபாத்தில் குடியேறத் தேர்ந்தெடுத்து, புதிய இந்திய வெளியுறவு சேவையில் சேர்ந்தார். எகிப்து, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளின் இந்தியத் தூதராகப் பணியாற்றியுள்ளார்.

இறப்பு தொகு

ஆபித் ஹசன் சஃப்ரானி 1984 இல் ஹைதராபாத்தில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. https://www.thenewsminute.com/article/abid-hasan-safrani-hyderabad-man-who-coined-rousing-jai-hind-72023
  2. Charles Stephenson (2009). Germany's Asia-Pacific Empire: Colonialism and Naval Policy, 1885-1914. Boydell Press. பக். 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84383-518-9. https://books.google.com/books?id=tOtCAQAAIAAJ. "...Champakaraman Pillai, a committed anti-imperialist. He is credited with coining the phrase 'Jai Hind' meaning 'Victory for India'..." 
  3. Saroja Sundararajan (1997). Madras Presidency in pre-Gandhian era: a historical perspective, 1884-1915. Lalitha Publications. பக். 535. https://books.google.com/books?id=-ExuAAAAMAAJ. "To Champakaraman Pillai goes the credit of coining the taraka mantra "Jai Hind" in 1907..." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபித்_ஹசன்_சப்ரானி&oldid=3724477" இலிருந்து மீள்விக்கப்பட்டது