ஆயிரப் பிரபந்தம்

ஆயிரப் பிரபந்தம் என்னும் நூல் கமலை ஞானப்பிரகாசர் என்பவர் இயற்றிய நூல்களில் ஒன்று இவரது பரம்பரையில் வந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த நூலின் பாடல்களாகச் சில பாடல்களையும் கூறுகின்றனர்.
உண்மையில் அவர்கள் கூறும் பாடல்கள் இந்த ஞானப்பிரகாசரின் வேறு நூல்களில் உள்ளன.
எனவே இந்த நூலைத் தனிநூல் எனக் கொள்வதற்கில்லை.

தனிநூல் எனல்

பகர்ந்த கமலை த்யாகேசர் பஞ்சாக் கரத்தின் பயனறிந்த
திகழ்ந்த குரு ஆயிரப் பிரபந்தம் செய்த குரவன் திருவாரூர்
உகந்த ஞானப் பிரகாசன் உண்மைக் குருவின் உயர்குலத்தோன்
மகிழ்ந்த வாழ்வு பன்னாளும் வளஞ்சேர் சோழ மண்டலமே [1]

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்பு தொகு

  1. சோழமண்டலச் சதகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரப்_பிரபந்தம்&oldid=1121590" இலிருந்து மீள்விக்கப்பட்டது