ஆயுதப்படை நாள் (வங்காள தேசம்)
ஆயுதப்படை நாள் ( ஆங்கிலம்:Armed Forces Day ) நவம்பர் 21 அன்று வங்காள தேசத்தில் அனுசரிக்கப்படுகிறது. இது 1971 ல் விடுதலைப் போர் படைகள், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் முழுமையாக செயல்பட்டு பாக்கித்தான் இராணுவத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடங்கிய நாளைக் குறிக்கிறது.[1] டிசம்பர் 16, 1971 அன்று, 93,000 பேர் கொண்ட பாக்கித்தான் இராணுவம் வங்க தேசம் மற்றும் இந்தியாவின் கூட்டணிப் படைகளிடம் (கூட்டு கட்டளை) சரணடைந்து, வங்க தேசத்தின் விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
முக்கியத்துவம் தொகு
நவம்பர் 21 அன்று, விடுதலைப் போருக்கு ஏறக்குறைய ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, மூன்று சக்திகளும் ஒரே நேரத்தில் ஒரு கூட்டு நடவடிக்கைக்கு வழிவகுத்தன, இது நாள் ஆயுதப்படை தினமாக குறிப்பிடப்பட்டது. இந்த படைகள் இணைந்ததன் விளைவாக எல்லையில் உள்ள பெரிய பகுதிகள் ஒவ்வொரு நாளும் விடுவிக்கப்பட்டன.வங்க தேச படைகளுக்கு சில நாட்களுக்குள் இது பாக்கித்தானுக்கு எதிரான தகவல்தொடர்பு பாதைகளை சீர்குலைக்க அனுமதித்தது.[2] இந்த நாள் வங்க தேச வரலாற்றில் சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது மற்றும் விடுதலைப் போரில் போராடி தங்கள் உயிரைக் கொடுத்த வங்க தேச ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் செய்த தியாகங்களை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் உரிய மரியாதையுடனும் முக்கியத்துவத்துடனும் கொண்டாடப்படுகிறது. [ மேற்கோள் தேவை ]
வரலாறு தொகு
வங்க தேச விடுதலைப் போர் 1971 மார்ச் 25 அன்று பாக்கித்தான் இராணுவத்தின் எதிர்ப்பு இயக்கத்தின் வடிவத்தில் முதன்மையாக தாக்காவில் தொடங்கியது, பின்னர் அதுமுழு வங்கதேசம் முழுமைக்கும் விரிவடைந்தது. படிப்படியாக, வங்கதேசப் படைகள் கொரில்லா போராளிகளின் சிறிய குழுக்களை ஏற்பாடு செய்தன, அவர்கள் 'ஹிட் அண்ட் ரன்' [3] தந்திரங்களைப் பின்பற்றி தாக்குதல் நடத்தினர். போரின் மூன்றாவது கட்டமாக, பாக்கித்தான் ராணுவத்தில் பணியாற்றிய பங்களாதேஷ் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் பங்களாதேஷ் விடுதலை இயக்கங்களில் சேர அவரவர்கள் பண்யாற்றிய பிரிவுகளை விட்டு வெளியேறி, இந்திய பிரதேசத்தின் எல்லையைத் தாண்டி வழக்கமான அலகுகளாக முக்கிய நிலப்படையாக நிலை கொண்டனர். கடற்படை அதிகாரிகளின் ஒரு சிறிய குழுவும் கடற்படைப் பிரிவை உருவாக்கியது, ஒரு சில விமானிகள் மற்றும் விமான வீரர்கள் வான் வெளியில் பங்காற்றினர். வங்க தேச இராணுவம் வங்க தேசப் படைகளைக் கொண்டு நீண்டகால கொரில்லா யுத்தம் தொடங்கியது. பின்னர் அது பல மாதங்கள் தொடர்ந்தது. மேலும் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது, வங்க தேசப்படைகள் மூன்று படைப்பிரிவு அளவுள்ள ஒரு போர் குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற போரில் பாக்கித்தான் இராணுவம் வங்க தேசம் மற்றும் இந்தியாவின் கூட்டணிப் படைகளிடம் (கூட்டு கட்டளை) சரணடைந்து, வங்க தேசத்தின் விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
வரவேற்பு தொகு
அதிபர், பிரதமர் மற்றும் தலைவர்கள் தாக்கா இராணுவ முகாமில் உள்ள 'சிகா அனிர்பன்' (நித்திய சுடர்) என்ற இடத்தில் மலர் மாலை வைப்பதன் மூலம் இந்த நாள் தொடங்குகிறது. பிரதமர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிற உயர் அலுவலர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்துகொள்ளும் வரவேற்பு நடைபெறுகிறது.[4] பிற இடங்களில், கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவை சேர்ந்து வரவேற்புகள் நடத்தப்படுகின்றன. அன்று "அனிர்பன்" என்ற சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது, மேலும் தேசிய நாளிதழ்கள் சிறப்புப் பக்கங்கள் வெளியிடுகின்றன. சுதந்திர போராட்ட வீரர் என்ற விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மற்றும் தலைவர்களும் வரவேற்பு அளிக்கின்றனர். மேம்படுத்தப்பட்ட உணவு அனைத்து இராணுவ நிலையங்களிலும் அன்று வழங்கப்படுகிறது. ஆயுதப் பிரிவு, சுதந்திரப் போர் மற்றும் ஆயுதப்படைகள் தொடர்பான கட்டுரைகளுடன் ஒரு சிறப்பு வெளியீட்டையும் வெளியிடுகிறது.[5]
குறிப்புகள் தொகு
- ↑ "Govt will continue efforts to modernise armed forces: PM". Bangladesh Sangbad Sangstha. 20 November 2002 இம் மூலத்தில் இருந்து 28 September 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070928121312/http://www.bssnews.net/index.php?genID=BSS-01-2002-11-20&id=7.
- ↑ . 22 November 2009.
- ↑ Iqbal, Mumtaz. "Why the Movement for Bangladesh Succeeded: A Military Appreciation" இம் மூலத்தில் இருந்து 19 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090319151854/http://www.defencejournal.com/apr99/bangladesh.htm.
- ↑ "BNP unhappy over protocol at Senakunja reception". http://www.observerbd.com/details.php?id=44818.
- ↑ "Armed Forces Day Sunday". http://www.thefinancialexpress-bd.com/2016/11/19/53595/Armed-Forces-Day-Sunday.