இசுபாங்கூர் ஏரி

ஸ்பாங்கூர் ஏரி (Spanggur Tso), இமயமலையில் உள்ள திபெத் தன்னாட்சிப் பகுதியின் மேற்கேயும், லடாக்கிற்கு கிழக்கேயும் அமைந்த உப்பு நீர் ஏரி ஆகும். 1962 இந்திய-சீனப் போரின் போது இப்பகுதியில் இராணுவ மோதல்கள் வெடித்தது. தற்போது இந்த ஏரி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குளிர்காலத்தில் முற்றிலும் உறைந்து விடும். இதன் அருகில் இந்தியாவின் ரெசின் கணவாய் உள்ளது. இதன் வடமேற்கில் பாங்காங் ஏரி உள்ளது.

இசுபாங்கூர் ஏரி
மான்டோங் ஏரி
அமைவிடம்ருதோக் கவுண்டி, திபெத் தன்னாட்சிப் பகுதி, சீனா
வகைஉப்பு நீர் ஏரி
அதிகபட்ச நீளம்20.9 km (13.0 mi)
அதிகபட்ச அகலம்அதிகபட்ச நீளம் 4.5 km (2.8 mi) குறைந்தபட்ச் அகலம் 2.95 km (1.83 mi)
மேற்பரப்பளவு61.6 km2 (23.8 sq mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்4,305 மீட்டர்கள் (14,124 அடி)
ஸ்பாங்கூர் ஏரி மற்றும் பாங்காங் ஏரிகளைக் காட்டும் வரைபடம், ஆண்டு 1954

61.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் அதிகபட்ச நீளம் 20.9 கிலோ மீட்டராகவும்; அதிகபட்ச அகலம் 4.5 கிலோ மீட்டராக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  • Cunningham, Alexander (1854), Ladak: Physical, Statistical, Historical, London: Wm. H. Allen and Co – via archive.org
  • Strachey, Henry (1854), Physical Geography of Western Tibet, London: William Clows and Sons – via archive.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுபாங்கூர்_ஏரி&oldid=4045975" இலிருந்து மீள்விக்கப்பட்டது