இத்திக்கரை ஆறு

இத்திக்கரை ஆறு தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு. இதன் நீளம் 56 கிலோமீட்டர். இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்முடி என்ற இடத்தில் உற்பத்தியாகி பின் கொல்லம் மாவட்டம் வழி பாய்ந்து இறுதியில் பரவூர்க் காயலில் சென்று சேர்கிறது. கொல்லத்தில் இருந்து 15 கிலோமீட்டரில் இந்த ஆற்றின் கரையில் இத்திக்கரை என்ற சிற்றூர் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்திக்கரை_ஆறு&oldid=1349085" இலிருந்து மீள்விக்கப்பட்டது