இனோகா சத்தியாங்கனி

இனோகா சத்தியாங்கனி கீர்த்திநந்தா ( Inoka Sathyangani Keerthinanda ) சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலங்கை திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் [1] மற்றும் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். 2002 ஆம் ஆண்டில், கருக்கலைப்பு கருப்பொருளைக் கையாளும் இவரது முதல் முயற்சியான சுலாங் கிரில்லி என்றத் திரைப்படத்திற்காக இவர் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். இலங்கையின் திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படம் வென்ற அதிகபட்ச விருதுகளை இப்படம் வென்றது. இவர் "சிறந்த மற்றும் ஆரோக்கியமான இலங்கைத் திரையுலகை" நோக்கிச் செயல்படும் "கொழும்பு சுதந்திர சினிமா மன்றத்தின்" செயலில் உறுப்பினராக உள்ளார். அதிக தயாரிப்புத் திறன் கொண்ட கன்னி முயற்சிக்குப் பிறகு, இவர் இலங்கையில் வெற்றிகரமான ஒரு சில பெண் இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். [2]

இனோகா சத்தியாங்கனி கீர்த்திநந்தா
பிறப்பு1968
இலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள்விசாக்கா வித்தியாலயம்
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் இனோகா சத்தியாங்கனி

சுயசரிதை தொகு

கீர்த்திநந்தா தனது ஆரம்பக் கல்வியை சுஜாதா வித்தியாலயத்தில் பெற்றிருந்தார். அதற்கு முன் தனது இடைநிலைப் படிப்பிற்காக கொழும்பு விசாகா வித்தியாலயத்திற்குச் சென்றார்.

குறிப்புகள் தொகு

  1. "New state media heads appointed - Breaking News | Daily Mirror".
  2. "Home truths for Sri Lankan film". http://news.bbc.co.uk/2/hi/south_asia/3747370.stm. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனோகா_சத்தியாங்கனி&oldid=3705578" இலிருந்து மீள்விக்கப்பட்டது