இயாசுடி இத்தாலியா

இந்திய மருத்துவர்

இயாசுடி மானேக்சா இத்தாலியா (Yazdi Maneksha Italia) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். ஒரு விஞ்ஞானியாகவும் அறியப்படும் இவர் குசராத்து அரசாங்கத்தின் அரிவாள் அணு இரத்த சோகை கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநராக இருந்தார்.[1][2][3] இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் பல ஆராய்ச்சி திட்டங்களில் இணை ஆய்வாளராக இருந்தார்.

2006 ஆம் ஆண்டு, குசராத்து மாநிலத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோதியின் கீழ், அரிவாள் அணு இரத்த சோகை கட்டுப்பாட்டு திட்டத்தை நிறுவுவதற்கு இவர் தலைமை தாங்கினார். 2011 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் கீழ் பிரதமர் விருதைப் பெற்றார்.[4] 2023 ஆம் ஆண்டில் குசராத்து அரசு இவருக்கு முதல்வர் பூபேந்திர படேல் விருதையும், 2024 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதையும் வழங்கியது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Women Of India Are NDTV's 'Indian Of The Year': Full Winners' List Here". NDTV.com. 22 February 2019. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
  2. "Dr. Yazdi Maneksha Italia Awarded Padma Shri in 2024". Parsi Khabar. 25 January 2024. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
  3. "It belongs to my whole team: Dr Yazdi Italia on Padma Shri Award". ANI News. 26 January 2024. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
  4. Thomas, Melvyn (26 January 2024). "Gujarat's Tribal Healthcare Hero: Dr Yazdi Italia's Lifesaving Work Earns Padma Shri Award". Free Press Journal. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
  5. "Padma Awards 2024 announced", pib.gov.in, பார்க்கப்பட்ட நாள் 2024-04-13
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயாசுடி_இத்தாலியா&oldid=3934149" இலிருந்து மீள்விக்கப்பட்டது