இரண்டாம் சந்திரராஜா

சகமனா ஆட்சியாளர்

இரண்டாம் சந்திர-ராஜா (Chandraraja II) (ஆட்சி 836-863 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர் வடமேற்கு இந்தியாவில் இன்றைய ராஜஸ்தானின் சில பகுதிகளை ஆட்சி செய்தார்.

இரண்டாம் சந்திரராஜா
சாகம்பரி மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் 836-863 பொ.ச.
முன்னையவர்முதலாம் கோவிந்தராஜா
பின்னையவர்இரண்டாம் கோவிந்தராஜா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

வரலாறு தொகு

சந்திரன் தனது தந்தை கோவிந்தராஜாவிற்குப் (முதலாம் குவாகா ) பிறகு சகமனா சிம்மாசனத்தில் அமர்ந்தார். [1] பிஜோலியா கல்வெட்டு குவாகாவின் வாரிசுக்கு ஷஷி-நிரிபா ( IAST : Śaśinṛpa) என்று பெயரிடுகிறது. இது இரண்டாம் சந்திரராஜாவின் மற்றொரு பெயராகத் தோன்றுகிறது. [2] "சந்திர-ராஜா" , "ஷஷி-நிரிபா" என்ற இரண்டு பெயர்களும் "சந்திரன்-ராஜா" எனப் பொருள் தருகிறது. [3]

சாகம்பரி அரசர் மூன்றாம் பிருத்விராஜனின் (வழக்கமான நாட்டுப்புற புராணங்களில் பிருத்திவிராச் சௌகான் என்று அழைக்கப்படுகிறார்) வாழ்க்கையைப் பற்றிய ஒரு புகழ்ச்சியான சமசுகிருத காவியமான "பிருத்விராஜ விஜய"த்தில், இவர் தெளிவற்ற சொற்களைப் பயன்படுத்தி புகழப்படுகிறார். ஆனால் இவரது ஆட்சியைப் பற்றி சிறிய உறுதியான தகவல்கள் கிடைக்கின்றன. இவருக்குப் பின் இவரது மகன் இரண்டாம் கோவிந்தராஜா (இரண்டாம் குவாகா) ஆட்சிக்கு வந்தார். [4]

சான்றுகள் தொகு

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சந்திரராஜா&oldid=3407010" இலிருந்து மீள்விக்கப்பட்டது