இரத்தினேஸ்வரர் மகாதேவர் கோயில்

இரத்தினேஸ்வரர் மகாதேவர் கோயில் (Ratneshwar Mahadev Mandir) (இந்தி: रत्नेश्वर महादेव मंदिर) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணசி நகரத்தில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்த மணிகர்ணிகா படித்துறையில் அமைந்த, சிவன் கோயில் ஆகும். இக்கோயில் கங்கை ஆற்றில் கரைபுரண்ட வெள்ள நீரால் தற்போது 9 பாகை அளவில் சாய்ந்துள்ளது.[2] எனவே இக்கோயிலை உள்ளூர் மக்கள் 'சாய்ந்த கோயில்' என்றும் அழைப்பர். மழைக்காலங்களில் இக்கோயிலின் கர்ப்பக்கிரகம் நீரில் அமிழ்ந்திருப்பதால், கோடைக்காலத்தில் மட்டும் கருவறையைப் பார்க்கலாம். [3]மகாராணி அகில்யாபாய் ஓல்கர் இக்கோயிலை நகரா கட்டிடக்க்லை நயத்தில் 1795-இல் நிறுவினார்.[4]

இரத்தினேஸ்வரர் மகாதேவர் கோயில்
வாரணாசி
இரத்தினேஸ்வரர் மகாதேவர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரப் பிரதேசம்
மாவட்டம்:வாரணாசி
அமைவு:மணிகர்ணிகா படித்துறை, வாரணாசி
ஏற்றம்:12.20[1] m (40 அடி)
ஆள்கூறுகள்:25°18′43″N 83°00′58″E / 25.3119°N 83.01603°E / 25.3119; 83.01603
கோயில் தகவல்கள்

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு