கா. உதயசங்கர்
கா. உதயசங்கர் (பிறப்பு: 10 பிப்ரவரி 1960) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார்[1]. இவர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார்.[2] இவருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய புரஸ்கார் விருது ஆதனின் பொம்மை என்ற சிறார் நாவலுக்காக வழங்கப்பட்டது.[3] 2022 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர்.[4]
கா. உதயசங்கர் | |
---|---|
![]() | |
பிறப்பு | 10 பெப்ரவரி 1960 கோவில்பட்டி, பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா |
இனம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | இளங்கலை (வேதியியல்) |
பணி | கவிஞர், கட்டுரையாளர், புதின ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் |
பெற்றோர்(கள்) | கமலம் (தாய்) ச. கார்மேகம் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | மல்லிகா (தி. 1987) |
பிள்ளைகள் | நவீனா துர்கா |
விருதுகள் | பால சாகித்திய புரசுக்கர் விருது (2023) |
பிறப்பு
தொகுஇன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் 10 பிப்ரவரி 1960 அன்று கமலம் - ச. கார்மேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார் உதயசங்கர்.
கல்வியும் பணியும்
தொகுஇவர் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். இந்திய இரயில்வேயில் பணி செய்தவர்.
இலக்கியப்படைப்புகள்
தொகுசிறுகதை நூல்கள்
தொகு- யாவர் வீட்டிலும்
- நீலக்கனவு
- மறதியின் புதைசேறு
- உதயசங்கர் கதைகள்
- ஒரு விளக்கும் இரண்டு கண்களும்
- பிறிதொரு மரணம்
- கண்ணாடிச்சுவர்கள்
- குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு
- தூரம் அதிகமில்லை
- பின்பு பெய்தது மழை
- மீனாளின் நீலநிறப்பூ
- துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்
- உதயசங்கர் கதைகள் 100
குறுங்கதை
தொகு- அசைவற்று மிதக்கும் நிழல்
குறுநாவல்
தொகு- ஆனால் இது அவனைப்பற்றி
கவிதை நூல்கள்
தொகு- ஒரு கணமேனும்
- காற்றைவாசி
- தீராது
- எனவே
- தீராத பாடல்
குழந்தை இலக்கியம்
தொகு- தலையாட்டி பொம்மை (குழந்தைப்பாடல்கள்)
- பச்சை நிழல் (சிறுவர் கதைகள்)
- குழந்தைகளின் அற்புத உலகில் (கட்டுரைகள்)
- மாயக்கண்ணாடி (சிறுவர் கதைகள்)
- பேசும் தாடி (சிறுவர் நாவல்)
- விரால் மீனின் சாகசப்பயணம்
- கேளு பாப்பா கேளு (குழந்தைப்பாடல்கள்)
- பேய் பிசாசு இருக்கா? (கட்டுரைகள்)
- ரகசியக் கோழி (சிறுவர் கதைகள்)
- அண்டாமழை (சிறுவர் கதைகள்)
- ஏணியும் எறும்பும் (சிறுவர் கதைகள்)
- மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
- மாயாவின் பொம்மை (சிறுவர் கதைகள்)
- சூரியனின் கோபம் (சிறுவர் கதைகள்)
- குட்டி இளவரசனின் குட்டிப்பூ
- புலிக்குகை மர்மம்
- ஆதனின் பொம்மை
- பொம்மைகளின் நகரம்
- அலாவுதீனின் சாகசங்கள்
- கால்களில் ஒரு காடு
- சிறார் கிராமியக்கதைகள்
- சிறார் நாடோடிக் கதைகள்
- என் அம்மா எங்கே
- பேயா பிசாசா?
- கஞ்சராஜாவின் கணக்கு
- விசிலடிக்கும் சைக்கிள்
- கத்திக்கப்பல்
- சுண்டெலியின் சிரிப்பு
- பப்புக்குரங்கின் வால்
- சூரியனைத் தொட ஆசை
- கதை கதையாம்
- அதிசய மோதிரம்
- நான் யார்?
- மந்திரத்தொப்பி
- அதிசயத்திலும் அதிசயம்
- நன்றி நன்றி நன்றி
- புலிக்குட்டியும் வண்ணத்துப்பூச்சியும்
- பைக்குள் வானவில்
- நண்பனா? எதிரியா?
- மாயக்காடு
- குட்டிப்பாப்பாவின் அற்புத உலகம்
- மாரி என்னும் குட்டிப்பையன் (அறிவியல் வெளியீடு)
- ஆனியின் உலகில்
- The Little’one’s wonderful world
- பேய் பிசாசு இருக்கா?
- தாத்தாவுக்குத் தாத்தா
- குறும்புக்காரக் குட்டிக்குரங்கு
- புழுவின் கர்வம்
- அணிலின் துணிச்சல்
- கூடி வாழவேண்டும்
- ஓணான் கற்ற பாடம்
- தேன் எடுக்கப்போன குட்டித்தேனீ
- கசப்பு மரம் இனிப்பு மரம்
- ஊஞ்சலில் ஆடிய வண்ணத்துப்பூச்சி
- வழி தவறிய வண்ணத்துப்பூச்சி
- பச்சைக்கிளிகளின் சண்டை
- அம்மா எங்கே?
- யாருடைய முட்டை?
- நடந்தார்கள்
- முதல் உயிர்
- கெக்கெக் கே
- சேவல் முட்டை
- கேப்பைக்களி சாப்பிட்ட புலி
- வாசிக்கத்தெரியாத வாத்து
- விளையாட வேண்டாமா டின் டின்
- எனக்குச் சாப்பிடப்பிடிக்கவில்லை அம்மா
- நலம் தரும் சுத்தம்
- குளிக்க மாட்டேன் போ
- ஏன் பல் தேய்க்கணும்
- மூணுகால் முயல்
- சட்டை கழற்றிய மொச்சைக்கொட்டை
- பலாமரத்தின் அன்பு
- குட்டிப்பூனையின் முதல்பாடம்
- குஞ்சுக்காகத்தின் ஆசை
- எறும்பின் பயணம்
- ஆந்தை படிக்கிறது
- மகிழ்ச்சியான டின் டின்
- சேர்ந்து விளையாடலாமா டின் டின்?
- உதவி செய்ய வேண்டும் டின் டின்
- பகிர்ந்து சாப்பிட வேண்டும் டின் டின்
- வெளிப்படையாகச் சொல் டின் டின்
- டின் டின்னை ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை
- யார் சிரிக்கிறார்கள்
- குட்டி எலி
- கூட்டு அவியல் பொரியல்
- கவனமா இருங்க மகிழ்ச்சியாக வாழுங்கள்
- ஒரு இறகின் பயணம்
- கீரை, பழங்கள், காய்கள் உணவு அறிமுகம்
- முட்டைக்குள் யார்?
- ஏழு தலைப்பாம்பு எகிறிக்குதிச்ச கதை
- பொம்மைகளின் நகரம் (அறிவியல் வெளியீடு)
- சோ சோவின் விசித்திரவாழ்க்கை
- கட்டைவிரலின் கதை
- பீம்பேட்கா
- யார் அந்த மர்ம மனிதன்
- பறம்பின் பாரி வானம்
மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு
தொகு- வாயும் மனிதர்களும்
- தயா
- புத்தகப்பூங்கொத்து – குழந்தைகளுக்கான படக்கதைகள்
- புத்தகப்பரிசுப்பெட்டி – குழந்தைகளுக்கான படக்கதைகள்
- லட்சத்தீவின் கிராமியக்கதைகள்
- லட்சத்தீவின் இராக்கதைகள்
- மீன் காய்க்கும் மரம்
- மரணத்தை வென்ற மல்லன்
- பறந்து பறந்து
- அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்
- இயற்கையின் அற்புத உலகில்
- பாருக்குட்டியும் அவளது நண்பர்களும்
- சப்தங்கள் வைக்கம் முகமது பசீர்
- கண்ணாடி பார்க்கும் வரையிலும் தொகுப்பு
- மாதவிக்குட்டியின் கதைகள் மாதவிக்குட்டி
- நட்சத்திரம் வீழும் நேரத்தில்
- லால் சலாம் காம்ரேட் இ.எம்.எஸ் (கட்டுரைகள்)
- தாத்தா மரமும் நட்சத்திரப்பூக்களும்
- கதைகேளு கதைகேளு காக்காவின் கதைகேளு
- காலக்கனவுகள்
- பூதத்தான் மலையில் இருளாண்டி ராட்சசன்
- இரண்டு தவளைகள்
- கிளிமரம்
- நடனமாடிய ஆடுகள்
- ஆலமரமும் சந்திரனும்
- பயங்கர மிட்டாய்
- காக்கா கொண்டு போச்சு
குழந்தை இலக்கியம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு
தொகு- நான்கு கெட்டிக்காரர்கள்
- நாயும் வேடனும்
- வெல்வெட் முயல்
- சிட்னி எங்கே?
- தங்கமீனும் மீனவனும்
- தங்கச்சேவலின் கதை
- தவளைராஜாவும் அரிசிப்பூக்களும்
- பயங்களின் திருவிழா
- சிரிக்க வைக்கச் சில கதைகள்
- வேம்புத்தாத்தா
- குட்டிப்பெண்ணும் காளான்களும்
ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு
தொகு- சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்
- நிர்வாணக்குரல்கள் சாதத் ஹசன் மண்டோ
- தோபா தேக் சிங் சாதத் ஹசன் மண்டோ
கட்டுரை நூல்கள்
தொகு- முன்னொரு காலத்தில்
- நினைவு என்னும் நீள்நதி
- சாதிகளின் உடலரசியல்
- எது மருத்துவம்
- காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா
- வேதகாலத்திற்கு திரும்ப முடியுமா?
பதவிகள்
தொகுஉதயசங்கர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினராகச் செயலாற்றி வருகிறார். 2021 முதல் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.[5]
விருதுகள்
தொகு- லில்லி தேவசிகாமணி நினைவு சிறுகதை நூல் விருது - 1993
- தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது - 2008
- உலகத்தமிழ் பண்பாட்டு மைய விருது – 2015
- எஸ். ஆர். வி. பள்ளியின் படைப்பூக்க விருது - 2016
- கலை இலக்கியப் பெருமன்றம் – சிறுவர் இலக்கிய விருது – 2016
- விகடன் விருது – சிறுவர் இலக்கிய விருது - 2016
- கு.சி.பா. நினைவு - சிறுவர் இலக்கிய விருது – 2017
- நல்லி - திசைஎட்டும் மொழிபெயர்ப்பு விருது - 2017
- தமிழ் பேராயத்தின் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - 2017
- கவிதை உறவு சிறுவர் இலக்கிய விருது - 2018
- அறம் தமுஎகச படைப்பாளர் விருது - 2019
- தமிழ்ச் செம்மல் விருது - 2022
- பால சாகித்திய புரசுக்கர் விருது - 2023[3]
தனி வாழ்க்கை
தொகு12 ஏப்ரல் 1987 அன்று மல்லிகா என்பவரைத் திருமணம் செய்தார் உதயசங்கர். இவ்விணையருக்கு நவீனா, துர்கா என்ற மகள்கள் உள்ளனர், இருவரும் ஓமியோபதி மருத்துவர்கள் ஆவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கோவில்பட்டி என்ற ஊரிலே எழுத்தாளர்கள்: உதயசங்கர் நேர்காணல்". Hindu Tamil Thisai. Retrieved 2021-04-06.
- ↑ "About the author udhayasankar". Archived from the original on 2017-10-22. Retrieved 2018-10-07.
- ↑ 3.0 3.1 Sahitya Akademi announces winners of Bal Sahitya Puraskar, Yuva Puraskar, இந்தியன் எக்சுபிரசு, 23 சூன் 2023
- ↑ https://tamilvalarchithurai.tn.gov.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/
- ↑ https://www.dinamani.com/tamilnadu/2021/Jun/14/childrens-writers-artists-association-emerged-3641649.html