உதயணன், மகத நாடு

உதயணன் (King Udayin) பரத கண்டத்தின் மகத நாட்டை ஆண்ட ஹரியங்கா வம்சத்தின் மூன்றாவது பேரரசர் ஆவார். இவர் மகத நாட்டை கிமு 460 முதல் கிமு 440 வரை ஆண்டார். உதயணன், அஜாதசத்ருவின் மகனும், பிம்பிசாரனின் பேரனும் ஆவார்.[1]

உதயணன், மகத நாடு
மகத நாட்டின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்அண். 460 – அண். 440 கிமு
முன்னையவர்அஜாதசத்ரு
பின்னையவர்அனுருத்தன்
பிறப்புகிமு ஐந்தாம் நூற்றாண்டு
இறப்புகிமு 440
அரச குலம்ஹரியங்கா வம்சம்
தந்தைஅஜாதசத்ரு

பாடலிபுத்திரம் நகரத்தை நிறுவதல் தொகு

உதயணன் சோன் ஆறு மற்றும் கங்கை ஆறு கூடுமிடத்தில் பாடலிபுத்திரம் எனும் புதிய நகரத்தை நிறுவி, தனது தலைநகரத்தை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார்.

வாரிசு தொகு

உதயணனுக்குப் பின் அவரது மகன் அனுருத்தன் மகத நாட்டை ஆண்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Agnihotri, V.K.. Indian History. Allied Publishers. பக். 168. https://books.google.com/books?id=MazdaWXQFuQC. 
  2. Nath Sen, Sailendra (1999). Ancient Indian History and Civilization. New Age International. பக். 114. https://books.google.com/books?id=Wk4_ICH_g1EC&pg=PA114#v=onepage&q&f=false. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயணன்,_மகத_நாடு&oldid=2712103" இலிருந்து மீள்விக்கப்பட்டது