உத்குடியாசனம்

உத்குடியாசனம் (Utkudiasana) என்பது யோகாசன செய்முறை நிலைகளில் ஒன்று. இது இந்து சமயங்களில் இறைவனது திருவுருவச் சிலைகளை அமர்ந்தவாறு அமைக்கும் ஓரு வடிவமுமாகும்.[1] இந்த ஆசன முறை ஒரு காலை நேராக மடித்து பீடத்தில் ஊன்றியும், மறுகாலை நேராக கீழே தொங்கவிட்டவாறும் அமைந்திருப்பதாகும்[2]. இந்த ஆசனத்தில் இறைவனுடைய திருமேனி நேராகவும், கம்பீரமாகவும் அமைந்துள்ளது. இந்த ஆசன முறையில் யோக தட்சிணாமூர்த்தியும், அய்யானார் சாமிகளும் அமைக்கப்படுகின்றன.

ஆதாரங்கள் தொகு

  1. http://www.muthukamalam.com/spiritual/hindu/p26.html
  2. "The Temple Survey Project Northern Region, Bhopal". பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்குடியாசனம்&oldid=3714407" இலிருந்து மீள்விக்கப்பட்டது