எழுத்து (இலக்கணம்)

தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து (letter) என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.

  • முதலெழுத்து, சார்பெழுத்து என்பன மொழியில் எழுத்து தனித்தன்மை, சார்புத்தன்மை குறித்த பாகுபாடுகள்.
  • உயிரெழுத்து, மெய்யெழுத்து என்பன அவற்றின் இயங்கு-தன்மை குறித்த பாகுபாடு. மெய் தனித்து இயங்காது.
  • குறில், நெடில் என்பன எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு பற்றியவை.
  • வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன எழுத்தின் பிறப்பிடத்தால் ஒலிப்பில் தோன்றும் வன்மை, மென்மை, இடைமை பற்றியவை.
  • சுட்டு, வினா என்பன மொழியிடை வரும் இடைச்சொல்லாகிப் பொருள் உணர்த்தும் எழுத்துகள். தனிநிலையில் இவை பொருள் உணர்த்துவது இல்லை.
  • மயங்கும் எழுத்துகள், மயங்கா எழுத்துகள் என்பவை நாவால் ஒலிக்கமுடியும் எழுத்துகளையும், ஒலிக்கமுடியாத எழுத்துகளையும் குறிப்பன.
  • மொழிமுதல் எழுத்துகள் என்பவை மொழியில் முதல் எழுத்தாக வருபவை
  • மொழியிறுதி எழுத்துகள் என்பவை மொழியின் இறுதியில் வருபவை.
  • புணர்ச்சியில் மயங்கும் எழுத்துகள்

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்து_(இலக்கணம்)&oldid=3399130" இலிருந்து மீள்விக்கப்பட்டது