எஸ். ஜோசப்

மலையாள எழுத்தாளர்

எஸ். ஜோசப் (எ) ச. சோசப் (S. Joseph, பிறப்பு: 1965) மலையாளத்தில் புதுக்கவிதை எழுதும் ஒரு இந்திய பின்நவீனத்துவக் காலக் கவிஞர்[1]. இவர் கேரளா எட்டுமனூர் அருகேயுள்ள பட்டிதனம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் சாமானிய மக்களின் பிரச்சனைக்களுக்காகவும், உழைக்கும் பாட்டாளி மக்களுக்காகவும் கவிதைகளைப் படைத்து வருகிறார். சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கும், பொது மக்களுக்கும் ஏற்படும் சமகாலத்திய சிக்கல்கள் பற்றிய பல படைப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். இவரது ”உப்பன்டே கூவல் வரக்குன்னு” கவிதைத் தொகுப்பு 2012 இல் கேரள சாகித்ய அகாதமி விருது பெற்றது.

கவிதைத்தொகுப்புகள் தொகு

  • கருத்த கல்லு (கோட்டயம் டி.சி.புக்ஸ் 2000)
  • மீன்காரன் (கோட்டயம் டி.சி.புக்ஸ் 2003)
  • ஐடென்ட்டி கார்டு (கோட்டயம் டி.சி.புக்ஸ் 2005)
  • உப்பன்டே கூவலு வரக்குன்னு கவிதைத் தொகுப்பு (கோட்டயம் டி.சி.புக்ஸ் 2011)

மேற்கோள்கள் தொகு

  1. "‘Nostalgia dominates Malayalam poetry’". The Hindu. 28 July 2009 இம் மூலத்தில் இருந்து 2 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090802103836/http://www.hindu.com/2009/07/28/stories/2009072850530200.htm. பார்த்த நாள்: 7 June 2011. 

வெளியிணைப்புகள் தொகு

மேலதிக வாசிப்புக்கு தொகு

  • Satyanarayana, K & Tharu, Susie (2011) No Alphabet in Sight: New Dalit Writing from South Asia, Dossier 1: Tamil and Malayalam, New Delhi: Penguin Books.
  • Satyanarayana, K & Tharu, Susie (2013) 'From those Stubs Steel Nibs are Sprouting: New Dalit Writing from South Asia, Dossier 2: Kannada and Telugu, New Delhi: HarperCollins India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜோசப்&oldid=3404002" இலிருந்து மீள்விக்கப்பட்டது